search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேகே நகர் பஸ் நிலையம்"

    தீபாவளி பண்டிகைக்காக திறக்கப்பட்ட சிறப்பு முன்பதிவு மையங்களில் 2 நாட்களில் மட்டும் 7187 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இன்றும் ஏராளமான பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனர். #Diwali #SpecialBuses
    சென்னை:

    தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக, பொது மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழகம் முழுவதும் 20,567 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த பஸ்கள் இன்று முதல் 5-ந்தேதிவரை இயக்கப்படுகிறது. இதில் சென்னையில் இருந்து மட்டும் 11,367 பஸ்கள் இயக்கப்படுகின்றன. மற்ற நகரங்களில் இருந்து 9,200 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இதேபோல் தீபாவளி முடிந்து மீண்டும் சென்னை உள்பட பல ஊர்களுக்கு திரும்பி வர வசதியாக நவம்பர் 7, 8, 9 ஆகிய தேதிகளில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.


    தீபாவளி சிறப்பு பஸ்களுக்கு முன்பதிவு செய்வதற்காக கோயம்பேட்டில் 26 முன்பதிவு மையங்கள் செயல்படுகிறது. இது தவிர தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையத்தில் 2, மாதவரம், பூந்தமல்லி பஸ் நிலையங்களில் தலா 1 என்ற அளவில் மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் கடந்த புதன்கிழமை திறக்கப்பட்டன.

    சிறப்பு முன்பதிவு மையம் திறக்கப்பட்ட 2 நாட்களில் மட்டும் 7187 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இன்றும் ஏராளமான பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனர்.

    முன்பதிவு செய்ய வரும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பயணச் சீட்டுகளை விரைந்து வழங்கும் வகையில் ஊழியர்கள் போதிய அளவில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.  #Diwali #SpecialBuses
    கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ்நிலையம், தாம்பரம் சானடோரியம், தாம்பரம் ரெயில் நிலையம், மாதவரம் புதிய பஸ்நிலையம், பூந்தமல்லி பஸ்நிலையம், கே.கே.நகர் பஸ்நிலையம் ஆகிய இடங்களில் இருந்து தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. #Diwali #SpecialBus
    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ்நிலையம், தாம்பரம் சானடோரியம், தாம்பரம் ரெயில் நிலையம், மாதவரம் புதிய பஸ்நிலையம், பூந்தமல்லி பஸ்நிலையம், கே.கே.நகர் பஸ்நிலையம் ஆகிய இடங்களில் இருந்து தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    வருகிற 3-ந்தேதி முதல் 5-ந்தேதி வரையில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லவும், 7-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை வெளியூர்களில் இருந்து சென்னைக்கு திரும்பவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    சென்னையில் இருந்து தினசரி செல்லக்கூடிய 2,275 பஸ்களுடன் 4,542 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கு மொத்தம் 11,367 பஸ்கள் இயக்கப்படும். அதேபோல் வெளியூர்களில் இருந்து 3 நாட்களுக்கு 9,200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.


    தீபாவளி முடிந்த பிறகு முக்கிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு திரும்ப 4 நாட்களுக்கு 7,635 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு வருகிற 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை நடைபெறும். கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ்நிலையத்தில் 26 முன்பதிவு சிறப்பு கவுண்டர்களும், தாம்பரம் சானடோரியம் பஸ்நிலையத்தில் 2 சிறப்பு முன்பதிவு கவுண்டர், பூந்தமல்லியில் 1 கவுண்டர், மாதவரம் புதிய பஸ்நிலையத்தில் 1 கவுண்டர் என மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு கவுண்டர்கள் செயல்படும் என அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. #Diwali #SpecialBus
    ×